தேயிலை பயிர்ச்செய்கை மற்றும் இறப்பர் உற்பத்தி தொழில்துறை சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாய் என்று அறிவிக்கப்பட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சரின் செயலாளர் மாபா பதிரணவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாயாகும். அத்துடன், வரவு - செலவுத் திட்ட  கொடுப்பனவான 100 ரூபாயும் சேர்த்து நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (RH)




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.