குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம் திகதியன்று வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்று பரவலினால் பாதிப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைத்திட்டம் இன்றும் இடம்பெற்றது.

ஏழு பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் இதற்கு தகுதி பெற்றுள்ளனர். (Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.