சமூகவலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் 19ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டமூலம் குறித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலி தகவல்கள் மற்றும் போலி பிரசாரங்களால் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக, சமூகத்தைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டத்தை உருவாக்குவது காலத்தின் தேவை என்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மிரர்