அரசாங்கத்தின் 4 இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய, சுகாதார அமைச்சு, மின்சார சபை,  இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீதே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென, இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின்  தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறு தாக்கதுலுக்கு இலக்கான சுகாதார அமைச்சு மற்றும் மின்சார சபையின் இணையத்தளங்களின் செயற்பாடு வழமைக்குத் திரும்பியுள்ளதென தெரிவித்த அவர், எனினும் குறித்த இணையத்தளங்களின் தரவுகள் திருடப்படாவிட்டாலும் தரவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SOURCE

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.