வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள 'யாஸ்' என்ற சூறாவளி அடுத்த சில மணிநேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமமைடையும் என்று எதிர்பார்க்கப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது

விசேடமாக மேற்கு, சப்ரகமுவ ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடுமுழுவதும் காற்றின் வேகம் 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வரை அதிகரிப்பதுடன் விசேடமாக மத்திய மேற்கு மலை சாரல் ,வட மத்திய ,வட மேற்கு மாகாணங்களிலும், கேகாலை வவுனியா முல்லைத்தீவு மன்னார் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும்.

இதே போன்று ,மேல் மகாண கரையோரப்பகுதியிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காற்று 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.