இன்று (25) நள்ளிரவு முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும், தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பத்தில் முறையாக இடம்பெற்ற போதிலும் தற்போது முன்னுரிமை பட்டியல்களை மீறி செயல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.