முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று (28) அறிவித்தார்.
கடந்த மார்ச் 09ஆம் திகதியன்று அசாத் சாலி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன்னை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்மன்றில் அசாத் சாலி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 29 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(Siyane News)
கருத்துரையிடுக