நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் கீழ் அத்தனகல்ல தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் பாதுகாப்பு குழுத்தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (24) நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜித் பிடிகலவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிட்டம்புவ  பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட அத்தனகல்ல தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுத்தலைவர்களும் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டதாக நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு குழுத்தலைவர் அல்ஹாஜ் கவுஸுல் பிர்தவ்ஸ் தெரிவித்தார். (Siyane News)













கருத்துரையிடுக

Blogger இயக்குவது.