2021 ஜூலை 08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2021 ஜூலை 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில்(மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் (குறிப்பாக 09ஆம், 10ஆம் திகதிகளில்) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ,வடமேல்,தென்மற்றும்மத்தியமாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில் சிலஇடங்களில்75மி.மீக்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவாமற்றும்கிழக்குமாகாணங்களிலும்முல்லைத்தீவுமாவட்டத்திலும்பலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

(Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.