தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2021 ஜூலை 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2021 ஜூலை 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் நாளையிலிருந்து (15ஆம் திகதிஅடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது.


சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.