தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது செப்டம்பர் 06 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்று (27) நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் 30 ஆம்திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும்.

இந்த ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.



(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.