வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கு இன்று (25) முதல் 3 மணித்தியாலங்களில் PCR முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வுக்கூட கட்டமைப்பின் ஊடாக மணித்தியாலத்திற்கு 500 பீ.சி.ஆர் முடிவுகளையும், நாளொன்றில் 7,000 முடிவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பரிசோதனைகளுக்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமாக 40 டொலர் அறவிடப்படவுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.