நாளை (01) நாடு திறக்கப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து இன்றைய தினம் மக்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.