நாட்டில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதிருக்கும் பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த ஒரு தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் நான் தயார்.

அதிகளவான உள்ளாடைகள் கையிருப்பில் உள்ளன. நாட்டிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இதுவரை உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. எதிர்காலத்தில் தேவைப்படும் நபர்களுக்கு அதனை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.