எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, இன்றைய தினம் (29) காலை 10.30 மணியளவில், உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில், நடைபெற்றது.

இதன்போது, குறித்த தவிசாளர் தெரிவில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், புதிய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரையும் கலந்துகொள்ள பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபையை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ள சென்ற மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பிரதேச சபையின் பணியாளர்களும் சோதனையின் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வடமாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் (29) புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.