தொம்பே பிரதேசத்தில் 15 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கரிம உரத்தினை பயன்படுத்தி விவசாயம்!

Rihmy Hakeem
By -
0

 (ரிஹ்மி ஹக்கீம்)

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேச சபைக்கு உட்பட்ட பாழுகம பிரதேச நெல் வயலில் கரிம உரத்தை மட்டும் பயன்படுத்தி விவசாயம் செய்யும் நடவடிக்கை கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

15 இற்கும் அதிகமான ஹெக்டேயர் வயலில் இவ்வாறு விவசாயம் செய்யப்படவுள்ளது. 

தொம்பே பிரதேச சபை உறுப்பினர் சரத் காமினி இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தொம்பே பிரதேச சபை தவிசாளர் பியசேன காரியப்பெரும உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

(Siyane News)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)