Litro நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன் புதிய விலை 2,750 ஆகும்.

அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 503 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 231 ரூபாவாலும் அதிகரிக்க Litro நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் (11) அறிவிக்கப்படவுள்ளன.

முன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.

எனினும், 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் மிரர் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.