விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக தான் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராடுவோம் எனவும் தனக்கும் தனது பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துள்ளார் எனவும் இதன் போதும் விவசாயிகளை வாழ வைப்பதற்கான விடயங்களை வலியுறுத்தவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இன்று (08) ஆனமடுவ மஹாஉஸ்வெவ பிரதேசத்தில் நெற்செய்கை விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும்  கொவி ஹதகெஸ்ம நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இது பற்றித் தெரிவித்தார்.

யாரும் ஒருபோதும் கடினமான முடிவுகளை எடுக்கக்கூடாது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேவைக்கேற்ப மக்களின் நலனுக்காக ஒரு படி பின்வாங்குவதில் தவறில்லை என்றும் தெரிவித்தார். உடனடியாக சேதனப் பசளைக்கு முழுமையாக விவசாயத்தை மாற்றக்கூடிய சாத்தியம் மிகக் குறைவு என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அதனை முறையாகத் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் தன்னிச்சையாக எடுக்கின்ற முடிவுகளின் விளைவு கவலைக்குரியது என்றும் அவர்  மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா,ஹெக்டர் அப்புஹாமி,முன்னால் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா,ஐக்கிய மக்கள் சக்தியின் ஆனமடுவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் காமினி வடிஹமங்காவ உட்பட மாவட்டத்தின் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று இருந்தனர்.

வலையொளி இணைப்பு-


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.