எரிபொருள் விலையை  இன்று (21) நள்ளிரவு முதல்  அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவியினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் வகை டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.