சதொச நிறுவனத்திடமிருந்து வெள்ளைபூண்டு கொள்கலன்களை மோசடியான முறையில் கொள்வனவு செய்ததாக கூறப்படும் வர்த்தகரின் மகனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுமார் 11,719,520 ரூபா மோசடி செய்தமை, போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்க ஆதரவளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் இன்று (23) வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

Tamil mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.