மீகஹவத்த, தெல்கொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைக்குண்டு வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) காலை மேற்படி கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 34 வயதான குறித்த பெண், குண்டசாலை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

மேலதிக விசாரணைகளை மீகஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.