மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி, இம் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

   வீதி ஒழுங்குகளை அடையாளப்படுத்துவது போன்ற சிறு வேலைகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக, அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.வி.எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார்.

   எனினும், நிலவும் கடும் மழை காரணமாக, குறித்த நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

   இதேவேளை, பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள், 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   இது தவிர, கடவத்தை – மீரிகம பகுதியின் நிர்மாணப் பணிகள், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

16/11/2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.