Global International Championship இனால் நடாத்தப்பட்ட சர்வதேச KATA மற்றும் KUMITE போட்டிகளில் பங்குபற்றி வெற்றிப்பதக்கம், சான்றிதழ்களைப்பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07.11.2021) நடைபெற்றது. 

கல்குடா SKM பாடசாலையின் தலைவர் எம்.எஸ்.வஹாப்தீன் தலைமையில் செம்மண்ணோடையில் அமைந்துள்ள SKM பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்ஷூக் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக கல்குடா வலய பாடசாலைகளின் அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில், வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கங்கள் அனுவிக்கப்பட்டதுடன் வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

முஹம்மது ஆதில் - Aathil Ahd






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.