போலிச் செய்திகள் தொடர்பான வழிகாட்டல் கையேடு விடியல் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் முதற்பிரதி வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலியினால் அண்மையில் ஊடக அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

போலிச் செய்திகள் தொடர்பில் விழிப்புணர்வினை மேற்கொள்ளும் நோக்கில் இதுவரை தமிழ் மொழி மூலம் எந்தவொரு கையேடும் வெளிவராத நிலையில், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்களை அடிப்படையாக வைத்தே இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை வெளியிடுவதற்கான அனுசரணையை நீலன் திருச்செல்வம் மன்றம் வழங்கியிருந்தது. இந்த கையேட்டினை இலவசமாக பெறவிரும்புவோர் 0779595972 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.



இதேவேளை, "கொவிட் 19 போலிச் செய்திகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான கட்டுக் கதைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்" எனும் தலைப்பில் ஏற்கனவே விடியல் இணையத்தளம் 11 இணையவழி செயலமர்வுகளையும் 'பிறை எம்.எம்' ஊடாக நான்கு வானொலிக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடாத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்  வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விடியல் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்ட கையேட்டினை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.