Source : Lankadeepa


புத்தளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலும், நுரைச்சோலையிலுள்ள சிற்றுண்டிச்சாலையொன்றிலும் இரு கேஸ் அடுப்புக்கள் வெடித்துள்ளதாக புத்தளம், நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் வெஸ்டர்ன் வீதியின் 5வது ஒழுங்கையிலுள்ள வீதியொன்றிற்கு கடந்த 05 நாட்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட கேஸ் சிலிண்டரை அடுப்புடன் இணைத்து அடுப்பை பற்ற வைத்த போது அடுப்பு வெடித்துள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர். 

மேலும் நுரைச்சோலை இடம்பெயர்ந்தோர் முகாமின் சமையலறையில் பொருத்தப்பட்டிருந்த கேஸ் அடுப்பும் வெடித்துள்ளது. 

குறித்த சம்பவங்கள் தொடர்பில் புத்தளம் மற்றும் நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தவிர, நுவரெலியா - பம்பரகலே பிரதேசத்திலுள்ள வீடொன்றிலும் கேஸ் அடுப்பு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீட்டிலிருந்த ஒருவர் கேஸ் அடுப்பை செயலிழக்க செய்த பின்னர் அறைக்குள் சென்ற நிலையில் குறித்த அடுப்பு அதிக சப்தத்துடன் வெடித்துள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.