ஜனாதிபதி தேர்தலின் போது மலட்டு வைத்தியர் கதையை வைத்து ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இன்று அம்பலமாகியுள்ளதாகவும், பொய்,மோசடி மற்றும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது மக்கள் மத்தியில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பெறுவதற்காக சமூகத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து மேற்கொள்ளப்பட்ட சகல செயற்பாடுகளையும் ஒவ்வொன்றாக முழு நாடும் தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முல்கிரிகல பிரதேச அமைப்பாளர் நிமல் பிரான்ஸிஸ்க் இன் காரியாலய திறப்பு நிகழ்வில் பங்குபற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (Siyane News)
கருத்துரையிடுக