2022 ஜனவரி 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2022ஜனவரி 31 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் கிழக்கு, ஊவா ,வடக்கு மற்றும வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு ,தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெற்யக்கூடும்.
தென் மாகாணத்திலும் ,இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் 50 மி.மீக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வளி மண்டலவியல் திணைக்களம்