நாடளாவிய ரீதியில் இன்று(07)  இடைக்கிடையே திடீர் மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்றிரவு நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்கப்படும் வரை, இன்றும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.