SLMC STR இளைஞர் காங்கிரஸின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் துஆ பிரார்த்தனை நிகழ்வு..

இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீமின் ஆலோசனையில், SLMC STR இளைஞர் காங்கிரஸின் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் துஆ பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

"SLMC STR இளைஞர் காங்கிரஸின் பல்கலைகழக மாணவர் ஒன்றிய" தலைவர் ஹூனைப் முக்ஸித் (யாழ்ப்பாண பல்கலைகழகம்) தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச்செயலாளர் மன்சூர்.ஏ.காதிர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ நளீம், மற்றும் கௌரவ சரீபா ஆகியோரும் ,அல் ஹாபிழ் இர்பான், மற்றும் சம்மாந்துறை வலய உதவிக்கல்வி பணிப்பாளர் ஜௌபர் ,மற்றும் slmc str இளைஞர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அல்ஹாபிழ் ஹாதிக் இப்றாஹிம் (BA)  ஆசிரியர் - தேசிய பாடசாலை மற்றும் மூத்த கட்சி போராளிகள் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.