(அஷ்ரப் ஏ சமத்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25வது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை மருதானை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தின் எம்.சி.பஹர்தீன் மண்டபத்தில் தலைவா் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.  

பிரதம அதிதியாக ஊடக அமைச்சா் டலஸ் அழகப்பெரும கலந்து கொண்டார். இந்திய பாராளுமன்ற  உறுப்பினர் நவாஸ் கணியும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கலாநிதி ரஸ்மினும் கலந்து கொண்டு உரையாற்றினார் . 

இந் நிகழ்வில் 2022 ஆண்டுக்கான முஸ்லிம் மீடியா Directory, இலங்கை பத்திரிகைச் சங்கங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர், வருடாந்த இதழ் என்பன வெளியிடப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவியாக  புர்ஹான் பீபி இப்திக்கார், செயலாளா் பிஸ்ரின் முஹமட், பொருளாளராக சிஹார் அனீஸ் ஆகியோருடன் 18 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.புதிய யாப்புத்திருத்தம் செய்யபப்பட்டது.  

முன்னாள் தலைவா் என்.எம்.அமீன் இவ் இயக்கத்தில் தொடா்ந்து இருத்தல் வேண்டும். அத்துடன் அவருக்கான ஒரு பதவியை நிர்வாகக் குழு தெரிவு செய்யும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.