தற்போது நமது நாடு ஒரு இக்கட்டான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்ப  சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த சமூகமும் பெரும் சிரமங்களை அனுபவித்து  வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலையில் இருந்து நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதம் மற்றும் பிரிவினைவாதம் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து மனித  உரிமைகளுக்காகவும் முன் நிற்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) இடம் பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பலஸ்தீனம் தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாட்டை தாம் பாராட்டுவதாகவும்  மதிப்பதாகவும் பலஸ்தீனத் தூதுவர் Zuhair Zair இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஓமான் நாட்டுத் தூதுவர் H. E.Juma Alshihhi, குவைட் நாட்டுத் தூதுவர் H.E. Mr. Khalaf Bu Dhhair, இந்தோனோசிய நாட்டுத் தூதுவர் H.E. Mrs.Dewi Gustina Tobing, பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் Umar Farooq Burki, துருக்கி நாட்டுத் தூதுவர் Demet Sekercioglu, பாலஸ்தீன நாட்டுத் தூதுவர் Zuhair Zair, மாலைதீவு நாட்டின் தூதுவர் Yang Thai Tan ஆகிய தூதுக்குழுவினர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (30) மாலை சந்தித்தனர்.

இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த  பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டன.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.