கலகெடிஹேன பிரதேசத்தில் கண்டி - கொழும்பு பிரதான வீதியை வாகனங்களால் மறித்து ஆர்ப்பாட்டம்

Rihmy Hakeem
By -
0

கம்பஹா மாவட்டம், கலகெடிஹேன பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இரு நாட்களாக வாகனத்தை நிறுத்தி  வரிசையில் இருந்த பெருமளவிலானோர் இன்று (17) இரவு 07.30 மணி முதல் கொழும்பு - கண்டி பிரதான வீதியை  வாகனங்களால் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே நிட்டம்புவ, கம்பஹா, வீரங்குல, யக்கல மற்றும் பெம்முல்ல பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் வருகை தந்த போதும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)