(ஹைதர் அலி)

இன்று காலிமுகத்திடலில் 4G, 5G Telecommunication Tower அமைக்கப்படது, இதனை ஆர்ப்பாட்ட களத்தில் இருந்த இளைஞர்கள் தான் இதனை #gotagogama வில் அமைத்தார்கள் என்று  ஒரு தவறான செய்தி ஆங்காங்கே பரப்பப்படுகின்றது. 

இதன் உண்மைத்தன்மை என்னவாக இருக்கும்?

இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயம், இதனை போராட்ட களத்தில் உள்ளவர்கள் அமைக்கவில்லை. இலங்கையில் frequency அரச அனுமதியின்றி வேறு யாரும் அதனை மேற்கொள்ள முடியாது. 

Telecommunication tower அமைக்க அதிகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்கள்தான் Dialog மற்றும் Mobitel. இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதி RDA வின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதி. 

இந்த இடத்தில் Dialog அல்லது Mobitel நிறுவனங்களுக்கு நினைத்தது போல் அரசின் உரிய அனுமதி இன்றி Tower அமைக்க முடியாது. 

ஆரம்பத்தில் mobile phone signal தடைசெய்ய  signal jammer பயன்படுத்திய அரசு திடீர் என்று 4G க்கு அனுமதிக்கிறது. அதுவும் இவ்வளவு அவசர அவசரமாக  என்றால் சிந்திக்க வேண்டிய விடயம் தான். 

சில நேரம் ஒரு இடத்தில் திடீர் என்று மக்கள் சனத்தொகை அதிகரித்து எதிர்பார்த்த அளவை விட கூடுதலானவர்கள் Networkல் இணைந்தால் Network தடைப்பட வாய்ப்புண்டு. இந்த காரணத்துக்காக   Dialog அல்லது Mobitel ஒரு Temporary Towerஐ அரச உயர் பீடத்திலிருந்து அனுமதி பெற்று அமைத்திருக்கவும் முடியும். 

அது அல்லாமல், அரச புலனாய்வுப் பிரிவு  Spot identification செய்யும் மோப்பம் பிடிக்கும் நடவடிக்கையாகவும் இருக்களாம். 

இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமான கண்காணிப்பில் இலங்கையின் அரச புலனாய்வு பிரிவு  ஏற்கனவே படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.