கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை சரியாகக் கணிப்பிட்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு அனைத்துப் பரீட்சார்த்திகளிடமும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இடையில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் திரும்பிச் செல்லாது பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரெயில் சேவையைப் போன்று ஏனைய போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறுகின்றன. நாளைய தினம் பகிஷ்கரிப்பு, வீதிகளில் இடையூறை ஏற்படுத்தல், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை புறந்தள்ளி மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கல்வி அமைச்சு அனைத்து சமூகத்தினரிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.

பரீட்சை கடமைகளுக்காக செல்வோருக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பில் தமக்குப் பிரச்சினைகள் இருக்குமாயின் 0112-784-208 அல்லது 0112-784-537 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும். இந்தப் பரீட்சை மாணவர்களின் வாழ்க்கையின் முதல் கட்டமாகும். இதற்காக கல்வியமைச்சு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.