பெருந்தோட்டப் பகுதியில் விறகு, உரம் தட்டுப்பாடு காரணமாக தேயிலை உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.இந் நிலையில் தற்போது நாட்டில் டீசல் விலையேற்றம் காரணமாக விறகின் விலை அதிகரித்துள்ளதுடன் சில தோட்டங்களுக்கு போதுமான அளவு விறகும் கிடைப்பதில்லை என்றும், இதனால் தரமான தேயிலை தூள் உற்பத்தி செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஒரு மீற்றர் விறகு 2000 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும், தற்போது ஒரு மீற்றர் விறகு 4000 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேயிலை தொழிற்சாலை பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையகப் பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு கடந்த காலங்களில் யட்டியன்தோட்டை, கித்துல்கலை, பலாங்கொடை, மொரட்டுவ,இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து விறகு பெற்றுக்கொள்ளப்பட்டன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக விறகு வியாபாரிகள் தொழிற்சாலைகளுக்கு விறகு விநியோகம் செய்வதனை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.