​கொழும்பு-02 கங்கா​ரா​ம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு விரைந்த மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது, பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து அங்கிருந்த மக்களை கலைப்பதற்காக, வானத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பெரமுனவின் அரசியல்வாதிக்கு ஆதரவளித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.