கம்பஹா மாவட்டம், மீரிகம - தங்ஓவிட்ட வீதியிலுள்ள ஹலுகம கந்தையில் பெற்றோல் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று நேற்று (23) விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பௌசரில் முத்துராஜவெலயில் இருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 33,600 லீற்றர் பெற்றோல், இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹலுகம ஏற்றத்தில் இருந்து திடீரென பின்னோக்கி பௌசர் இயங்கியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.