இலங்கையில் தற்போது கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் நேற்றையதினம் (17) நாடு முழுவதும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர். சமிதா கினிகே எச்சரிப்பு விடுத்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போடாதவர்களை விட தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்படும் விகிதம் குறைவாக உள்ளதாகவும் தடுப்பூசி போட்டவர்கள் வைரஸிலிருந்து சிறப்பாக பாதுகாக்கப்படுகிறார் என்பதனை நிரூபித்துள்ளதாக மேலும் அவர் கூறியிருந்தார்.

இதேவேளை, கொவிட் பரிசோதனைகள் முன்பு போன்று பல பகுதிகளில் தற்போது இடம்பெறவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன் நிகழ் நிலையில் இந்த தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் 



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.