ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்தவர்கள் அங்கிருந்து வௌியேறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்காத காரணத்தினாலேயே அவர்களை வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் நீண்ட காலமாக ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்கும் பிரதான நுழைவாயில் மறிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து வௌியேறுமாறு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான முடிவுகளை எடுப்பதற்கான பிரதான அலுவலக அமைப்பாகக் காணப்படும் ஜனாதிபதி செயலகத்தை நிறைவேற்று ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்க வேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.