பிளவுபட்டது மொட்டு கட்சி! பீரிஸ், டலஸ் உட்பட 13 எம்.பிக்கள் வெளியேற்றம்!! சபையில் சுயாதீனமாக இயங்கவும் முடிவு!!!


 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின் முக்கியமான 13 எம்.பிக்களே இவ்வாறு, ஆளுந்தரப்பில் இருந்து வெளியேறி, எதிரணி பக்கம வந்து, சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தமது அணி ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தது, அதற்கான காரணங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்களை விபரித்தார். விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினார். அத்துடன், சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ள மொட்டு கட்சி எம்பிக்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். இதனால் மொட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டது.

சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டு கட்சி எம்பிக்கள் விபரம்

1. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
2. டலஸ் அழகப்பெரும
3. பேராசிரியர் சன்ன ஜயசுமன
4. பேராசிரியர் சரித ஹேரத்
5. கலாநிதி நாலககொடஹேவா
6. கலாநிதி குணபால ரத்னசேகர
7. வைத்தியர் உபுல் கலப்பதி
8. வைத்தியர் திலக் ராஜபக்ச
9. சட்டத்தரணி டிலான் பெரேரா
10.சட்டத்தரணி உதயன கிரிந்திகொட
11.சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார
12.கே.பி.எஸ். குமாரசிறி
13. லலித் எல்லாவல

ஆர்.சனத்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.