தென் மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் மேல் மற்றும் தென் கடல் பிராந்தியங்களிலும் அத்துடன் நாட்டின் தென் மேற்கு கால் பகுதியிலும் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை  பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில் 
****************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல திசைகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து  தென் மேற்குத்  திசையை நோக்கி  காற்று வீசும். 

பேருவலை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இக் கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது. இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும்  கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக பேருவலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான  சந்தர்ப்பங்களில்  இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.