(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)

கிளிநொச்சியிலிருந்து இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர்கள் அகதிகளாக தனுஷ்கோடி பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர்.

நாட்டில்; ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 133 பேர் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் அகதிகள் தவித்து வருவதாக கடலோரப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடலோர பொலிஸார்; கப்பல் மூலம் மணல் திட்டில் தவித்த அகதிகளை மீட்பதற்காக ஹோவர்கிராப்ட் கப்பலில் புறப்பட்டனர். தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பல் திடீரென பழுதடைந்தது.

தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் தீடை மணல் பகுதியில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இரண்டரை மாத கைக்குழந்தையுடன் தஞ்சமடைந்து இருப்பதாக மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பழுதடைந்த கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து சரி செய்து பின்னர் தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3ஆவது மணல் திட்டிற்கு சென்றனர். அங்கு தவித்த 4 குழந்தைகள் உட்;பட 8 அகதிகளை மீட்டு கடலோர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 8 அகதிகளிடமும் கடலோர பொலிஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி உள்ளிட்ட மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதன்பேரில் கடலோரப் பொலிஸார் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் சென்று 8 பேரையும் மீட்டு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் இதில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் சிவராஜன்(வயது 35), இவருடைய மனைவி நிஷாந்தி(30,) குழந்தைகள் தீபிகா (9), தீட்ஷிகா(7). மற்றொரு குடும்பத்தை சேர்ந்த திரிகோணமலை பகுதியில் இருந்து வந்த கந்தசாமி சந்திரகுமார்(36), இவரது மனைவி மேரி சித்ரா (36) குழந்தைகள் வேனுஜன் (7), 2 மாத குழந்தை என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் அகதிகளாக வந்தது தெரியவந்தது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக படகு மூலம் வந்ததாக தெரிவித்தனர். அவர்களை தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும சார்பு- ஆய்வாளர் காளிதாஸிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மண்டபம் பொலிஸ்; நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விசாரணைக்கு பின்பு அவர்கள்; மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு குடும்பம் வாரியாக தனித்தனி வீடு ஒதுக்கீடு செய்து உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பொருளாதார பிரச்சினைக்குப் பிறகு இதுவரையில் நாட்டிலிருந்து 136 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.