(ஹஸ்பர்)
திருகோணமலை பாரதி புரத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விவசாய ஊக்குவிப்பு தொடர்பிலான பயிர் செய்கைக்கான விதைகள் மற்றும் மரக்கன்றுகள் கிளி மக்கள் லண்டன் அமைப்பினால் இன்று (27) வழங்கப்பட்டன.
இவ் இலவச பயிர் செய்கைக்கான கன்றுகள் ஊடாக வீட்டுத் தோட்ட செய்கையை அதிகரித்து உணவுப் பற்றாக்குறை தீர்வுக்கான ஓர் உந்து சக்தியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக செயற்பாட்டாளர்களான கே.பாமினி, தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.