ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்; வெளியாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இணையவுள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது.

இதன்படி, கட்சிகளாக இல்லாது தனிப்பட்ட எம்.பி.க்கள் என, பல கட்சிகளின் எம்.பி.க்கள் இணைந்து,  அமைச்சர் பதவிகளைப் பெறவுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.