ஸ்ரீலங்கா சுதந்திக்ர கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இவ்வாறு அமைக்கப்படும் கூட்டமைப்பு, எதிர்வரும் காலத்தில் ஆட்சி பீடத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மஹரகம பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு; தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தற்போது ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றமையினால், தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், தான் அதனை பொறுப்பேற்கத் தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க தயார் கிடையாது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.