அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான். (2:195)


عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( قال الله : أَنْفِق يا ابن آدم أُنْفِق عليك ) رواه البخاري ومسلم

ஆதமின் மகனே! (மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு. உனக்கு நான் செலவிடுவேன்' என்று அல்லாஹுதஆலா கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.

இவ்வாறான நிலையில் எம்மால் முடியுமான உதவிகளை பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்குவது அல்லாஹ்வின் பொருத்தமும், உதவியும் எமக்குக் கிடைப்பதற்கும், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெறவும் காரணமாக அமைகின்றன.

ஆதலால், சிறப்பான இம்முஹர்ரம் மாதத்தில் வசதி படைத்தோர் மற்றும் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு அப்பிரதேசங்களில் உள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.