(கனகராசா சரவணன்)


கரப்பான் பூச்சியுடன் கோழி புரியாணி பார்சலை வழங்கிய பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (30)  எதிர்வரும் 8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு,  25 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்துள்ளார்.

குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும்  வைத்தியர்கள்  சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை  விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்புரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரித்த நிலையில் இருந்துள்ளது .

இதுதொடர்பில், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.