பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடாசாலையின் பெருமையை அடையாளப்படுத்திய மாணவர் ஏ.சி.எம்.முஷ்பிக் காலமானார்.

2016 -2019 நான் அதிபராக இருந்த கால பகுதியில் விளையாட்டுத்துறையில் எமது கல்லூரி தேசிய மட்டத்தில் மிளிர விசேடமாக Cricket/football துறைகளில் தேசிய மட்டம் வரை பங்களிப்புச் செய்த பிரபலமான ஒரு மாணவர் இவர்.

2018 ம் ஆண்டில் under 16 கீழ் Hardball cricket இல் அகில இலங்கை போட்டியில் 2 ஆம் இடத்தில் வெற்றி பெறவும் அதன் பின் அவுஸ்திரேலியாவின் 16 வயதின் கீழ் அணியுடனும் சகல துறைகளிலும் சிறப்பாக  விளையாடினார்.

GCE OL பரீட்சையில் 5A உடன் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றார் ஒழுக்கம் மார்க்க விடயங்களில் பேணுதலுடைய மாணவனாக  சகலரினதும் அன்பைப் பெற்றவர்.

இவை அனைத்துக்கும் மேலாக பாடசாலையின் மிகச்சிறந்த ஒழுக்கப்பண்பாடு உடைய மாணவர்களில் ஒருவராகவும்  விளங்கினார்.

தேசிய மட்ட வெற்றியின் பின் இம்மாணவனை அவரது தகப்பனுடன் வைத்து (இங்குள்ள) எடுக்கப்பட்ட படம் மனதை மிகவும் நெகிழடையச் செய்கிறது.

- Fais Journalist -







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.