(அஷ்ரப் ஏ சமத் )

இலங்கையில் பிஸ்கட், ஜனாதிபதிசொக்லேட், ஜஸ் கிரிம், இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி கம்பனிகள் (மெலிபன், இட்னா, எலிபன்ட், உஸ்வத்த, லிட்டில் லயன் உஸ்வத்த போன்ற கம்பனியாளா்கள் இணைந்துள்ள இச் சங்கத்தினர் நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளா் மாநாடொன்றை நடாத்தினர். 

லிட்டில் லயன் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரி எஸ்.எம்.டி.சூரியகுமார தலைமையில் இடம்பெற்ற

இம் மாநாட்டில், இச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினா் ஷானாஸ் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.

பிஸ்கட், சொக்லேட், ஜஸ்கிரீம், இனிப்புப்பண்டங்களின் உற்பத்தியாளா்கள் இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது, 

இந் நாட்டில் பிஸ்கட், இனிப்பு, கேக் உற்பத்தியாளா்கள் நிறுவனங்களில் நேரடியாக 5 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நாம் தொழில் வழங்கியுள்ளோம். எமது உற்பத்தியான பிஸ்கட், கேக் அதிக விலையானாலும் பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா நாடுகள் எமது பிஸ்கட் சுவையை கவா்ந்துள்ளனா். அவா்களது நாட்டு உற்பத்தி பிஸ்கட்டை விட எங்களது உற்பத்தியையும் வாங்குகின்றனா். அவா்களது பிஸ்கட் எங்களது பிஸ்கட்டை விட விலை குறைவு. ஆனால், அந்த மக்கள் விலை கொடுத்து எமது பிஸ்கட்டினை வாங்குகின்றனா்.

திடிரென பிஸ்கட் உற்பத்திகள் விலை ஏற்றுவதற்கான முதன்மை காரணம் இலங்கையில் டொலர் பெறுமானம் கூடியது. 4 மாதங்களுக்கு முன் சீனி 100 ரூபாய். தற்பொழுது ஒரு கிலோ சீனி 320, ஒரு முட்டை 60 ரூபா, கோதுமை மா விலையேற்றம், டீசல் பெற்றோல் விலையேற்றம், மின்சாரம் துண்டிப்பு எரிபொருள் இல்லாமை அத்துடன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வங்கிகள் எல்.சி முறை இல்லாமையாகும். பிஸ்கட்டுகளைக் கொண்டு செல்லும் லொறிகள் வேன்களுக்கு டீசல் இல்லாமை, டீசல் விலையேற்றம். 

இதற்காக சில சமூக ஊடகங்கள் 5000 ஆயிரம் டொலா் சமூக ஊடகங்களி்ல் விளம்பரத்திற்காக செலுத்தி, எமது நாட்டு பிஸ்கட் கம்பனிகளை விலையேற்றம் என எங்களுக்கு சேறு பூசுகின்றனா். இந்த சமூக சேவை விளம்பரத்தினால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவா்கள் எங்களது கம்பனிகளை மூட வைத்துவிட்டு வேறு நாட்டின் பிஸ்கட் கம்பனிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றாா்களா ? இவா்களது நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.

எங்களது கம்பனிகளை மூட வைப்பதற்கான நோக்கமோ தெரியாது. இந்த உற்பத்தியில் உள்ளூர் முதலீட்டாளா்கள் மட்டுமே இத்துறையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் திறம்பட செயற்படுத்தி வருகின்றோம். இவா்கள் வெளிநாட்டு பிஸ்கட்டுகளை இங்கு கொண்டு வர நினைக்கின்றாா்களோ தெரியாது.

கடந்த 4 மாதங்களுக்குள் 277 வீதம் கோதுமை மா 77 இருந்து 290 ரூபா வரை விலையேற்றம். கோதுமை மா உள்ளூர் உற்பத்தி அல்ல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனி 114 இலிருந்து 320 ரூபா வரை விலை அதிகரிப்பு. மரக்கறி 195 ரூபாவில் இருந்து 475 வரை. மீண்டும் 1410 ரூபா வரை விலை அதிகரிப்பு. 

ஆனால், பிஸ்கட் 100 ரூபாவில் இருந்து 271 ரூபாவுக்கு மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 50 நாடுகளுக்கு எங்களது பிஸ்கட் ஏற்றுமதி செய்து இந்த நாட்டுக்கு வருடாந்தம் 150 மில்லியன் டொலரை கொண்டு வருகின்றோம். எங்களது பிஸ்கட் கம்பனியில் தற்பொழுது கூட 50 ஆயிரம் பேர் தொழிலை இழந்துள்ளனா். எங்களது உற்பத்தியில் 30 வீதமான 150,000 சில்லறைக் கடைகளாகும். நாங்கள் அரசுக்கு பெருந்தொகையான வரியையும் செலுத்துகின்றோம். அரசாங்கம் மேலும் சில நாடுகளின் தூதுவா்களை அணுகி இத்துறையை மேலும் மேம்படுத்தி உலக நாடுகளில் ஏற்றுமதியை அதிகரிக்க உதவ முன்வருதல் வேண்டும் எனவும் பிஸ்கட், சொக்லேட், ஜஸ்கிரீம், இனிப்புப்பண்ட உற்பத்தியாளா்கள் அங்கு கருத்து தெரிவித்தனா்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.