இந்த வாரத்தில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலூட்டும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாதாந்தம் தேவைப்படும் சுமார் 20,000 திரிபோஷ பொதிகள் தமது நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

அடுத்த சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என தி சிலோன் திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.